(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
இந்த வருடம் நேற்று (28) வரை 57 நாடுகளைச் சேர்ந்த 1767 பேருக்கு பார்வை வழங்குவதற்கு இலங்கையர்கள் பங்களித்துள்ளதாக இலங்கை கண் மருத்துவ சங்கம் தெரிவித்துள்ளது.
ஜப்பான், எகிப்து, பாகிஸ்தான், தாய்லாந்து, மலேஷியா, சிரியா உள்ளிட்ட 57 நாடுகளின் 117 நகரங்களில் பார்வையற்றோருக்கான கண்களை இலங்கையர்கள் தானம் செய்துள்ளதாக இலங்கை கண் மருத்துவ சங்கத்தின் சிரேஷ்ட முகாமையாளர் ஜகத் சமன் மாதராராச்சி ஊடகமொன்றுக்கு தெரிவித்தார்.
இலங்கையிலுள்ள கண் வைத்தியர்களின் பரிந்துரைகளின்படி, 541 இலங்கையர்களும் தங்கள் கண்களை தானம் செய்துள்ளனர்.
உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் உள்ள எவருக்கும் ஒரு கண் அல்லது இரண்டு கண்களும் பார்க்க முடியாதவர்களுக்கு இலவசமாக கண்களை வழங்க இலங்கை கண் மருத்துவ சங்கம் முன்வருவதாக ஜகத் சமன் மாதராராச்சி தெரிவித்துள்ளார்.
மேலும், இலங்கையர்கள் கண் சத்திரசிகிச்சையை மேற்கொள்வதற்கு அதிகூடிய விருப்பத்தை வெளிப்படுத்தியுள்ளதாகவும்இ 22 இலட்சம் இலங்கையர்கள் கண் சத்திரசிகிச்சையை மேற்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் அவர் கூறினார்.