NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

காதலர் தினத்தில் காதலி வர மறுத்ததால் உயிரை மாய்த்துக்கொண்ட இளைஞன்!

இறக்குவானை பிரதேசத்தில் காதல் துயரத்தால் இளைஞன் ஒருவர் உயிரை மாய்த்து கொண்டுள்ள சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

இறக்குவானையை சேர்ந்த 21 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த இளைஞனின் தாயார் வெளிநாட்டில் பணிபுரிபவர் எனவும்இ அவரது தந்தை கொழும்பு பிரதேசத்தில் பணிபுரிந்து வருவதாகவும்இ மேலும் இரு சகோதரிகளுடன் வீட்டில் வசித்து வருவதாகவும் தெரியவந்துள்ளது.

யுவதி ஒருவருடன் காதல் தொடர்பில் இருந்து வந்த நிலையில், சம்பவத்திற்கு முந்தினம் இரவு தனது காதலியுடன் தொலைபேசியில் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்ததாகவும் தெரிவித்துள்ளார்.

அந்த அழைப்பின் பின்னர் சகோதரர் சத்தமாக அழுததாகவும்இ நாளை காதலர் தினத்தை கொண்டாட இறக்குவானைக்கு வருமாறு தனது காதலியை இளைஞன் பலமுறை அழைப்பதை கேட்டதாகவும் இறந்தவரின் சகோதரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

இறப்பதற்கு முன் குறித்த இளைஞன் தனது கையை பிளேடால் வெட்டிக் கொண்டதை மரண விசாரணை அதிகாரி அவதானித்துள்ளார்.

இந்த மரணம் தற்கொலை என தெரிவித்த மரண விசாரணை அதிகாரிஇ சடலத்தை பிரேத பரிசோதனைக்காக கஹவத்தை ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்குமாறு உத்தரவிட்டார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles