NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் நபர் ஒருவர் உயிரிழப்பு

இரு தரப்பினரிடையே ஏற்பட்ட தகராறில் கூரிய ஆயுதத்தால் தாக்கியதில் நபரொருவர் உயிரிழந்துள்ளார்.

ஹெட்டிபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிஹிபியா ரத்மலே பகுதியில் நேற்று (06) மாலை இடம்பெற்ற இந்த மோதலில் 43 வயதுடையவரே உயிரிழந்துள்ளார்.

சந்தேக நபர் உயிரிழந்தவரின் மூத்த சகோதரரின் மகன் என்பதுடன், உயிரிழந்தவரின் மகனுக்கும் சந்தேக நபருக்கும் இடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக இந்தக் கொலை இடம்பெற்றுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles