ஆளும் கட்சியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் எதிர்வரும் 5,6,7 மற்றும் 8 ஆம் திகதிகளில் கட்டாயம் பாராளுமன்றத்தில் இருக்க வேண்டும் என ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரின் அலுவலகம் அறிவித்துள்ளது.
6,7 மற்றும் 8 ஆம் திகதிகளில் சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளதால், ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றத்திற்கு வர வேண்டியது கட்டாயம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரின் அலுவலகம் ஆளும் கட்சியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் வட்ஸ் அப் மற்றும் தொலைபேசிகளுக்கு தகவலை அனுப்பி நிலைமையை விளக்கியுள்ளது.
மேலும் வெளிநாடு அல்லது கொழும்புக்கு வெளியில் செல்வதை இந்த திகதிகளில் தவிர்க்குமாறும் ஆளும் கட்சியின் பிரதான அமைப்பாளரின் அலுவலகம் ஆளும் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அறிவித்துள்ளது.