NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கொங்கோ ஜனநாயக குடியரசில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 70 பேர் உயிரிழப்பு!

மேற்கு மத்திய ஆப்பிரிக்க நாடான கொங்கோ ஜனநாயக குடியரசில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இராணுவ வீரர்கள் உட்பட 70 பேர் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.

ருவான்டா நாட்டின் ஆதரவு கொண்ட M 23 என்ற கிளர்ச்சியாளர்கள் குழு, கொங்கோவின் சில பகுதிகளை சுற்றி வளைப்பதற்கான போராட்டத்தை முன்னெடுத்து வருகிறது.

இதனால் கடந்த மாதம் தொடங்கி அங்கு தொடர் வன்முறை ஏற்பட்டுள்ளது.

இதன் பின்னணியில், தெற்கு கிவூ நகரை M 23 கிளர்ச்சியாளர்கள் குழுவினர் சுற்றி வளைத்து கைப்பற்றியுள்ளதுடன், அங்குள்ள தேவாலயம் ஒன்றில் பதுங்கி இருந்து செயல்பட்டு வந்த கொங்கோ இராணுவ வீரர்களை குறி வைத்து கிளர்ச்சியாளர்கள் துப்பாக்கிச்சூட்டை நடத்தியுள்ளனர்.

இதில் இராணுவ வீரர்கள் உட்;பட 70 பேர் சுட்டு கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Share:

Related Articles