அரசாங்கத்தின் கொள்கை மற்றும் நிர்வாக நடவடிக்கைகள் தொடர்பில் கருத்துக்களை வெளியிடுவதற்கும், விமர்சிப்பதற்கும் சுகாதார சேவைச் சேர்ந்த அதிகாரிகளுக்கு கடுமையான விதிமுறைகளுடான தடை விதித்து சுகாதார அமைச்சின் செயலாளர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையை மீள பெற வேண்டும் என தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.
மேலும், குறித்த சுற்றறிக்கையை உடனடியாக மீள பெறவில்லை எனில் சிவில் அமைப்புகள், தொழிற்சங்கங்கள் மற்றும் மக்களையும் ஒன்றிணைத்து பாரிய போராட்டத்தை மேற்கொள்ளவுள்ளதாக அமைப்பின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் தெரிவித்துள்ளார்.
உண்மைகளை வெளிக்கொண்டு வருவதற்கு தடைவிதித்தும், சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் சூழ்ச்சிகளை மறைப்பதற்கும் அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கையா? இது என்பது தொடர்பில் தமக்கு சந்தேகம் எழுந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், இந்த சுற்றறிக்கையானது குறித்து ஒரு சேவையை மாத்திரம் கட்டுப்படுத்துவது மாத்திரமின்றி சுகாதாரத்துறை சார்ந்த அனைத்து தரப்பினரையும் அச்சுறுத்தும் விதமாக வெளியிடப்பட்டுள்ளதாக தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பின் தலைவர் ரவி குமுதேஷ் சுட்டிக்காட்டியுள்ளார்.