NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஜனாதிபதியின் யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம்- பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம்

மோசமான காலநிலையினால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட கொழும்பு, கொலன்னாவ மற்றும் நாட்டின் ஏனைய பிரதேச மக்களுக்கு உணவு, பானங்கள் மற்றும் அத்தியாவசிய சேவைகளை வழங்க ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட அமைச்சரவை பத்திரத்திற்கு நேற்று (03) அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதன்படி, கொலன்னாவ பிரதேச செயலகப் பிரிவில் களனி ஆற்றுப் பள்ளத்தாக்கில் மேற்கொள்ளப்படும் புதிய நிர்மாணங்களுக்கு அனுமதி வழங்காமை, அனுமதியற்ற அனைத்து நிர்மாணங்களையும் அகற்றுதல், தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் காணி நிரப்பும் நடவடிக்கைகளை நிறுத்துதல், தற்போதுள்ள நீர் விநியோகிக்கும் நிலையங்களின் தற்போதைய நிலையை மதிப்பீடு செய்து வடிகாலமைப்புகளைப் புனரமைத்து உடனடியாக திருத்த வேலைகளை மேற்கொள்ளுதல் ஆகிய விடயங்களில் கவனம் செலுத்துமாறு கொலன்னாவ பிரதேச செயலக அதிகாரிகளுக்கு அமைச்சரவை உத்தரவிட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles