NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

‘ஜனாதிபதி என்னை அரசியல் ரீதியாக பழி வாங்குகிறார்’ – ரொஷான் ரணசிங்க

எனக்கு வாழ்வதற்கான உரிமை வேண்டும்; வெளிநாடுகளில் அரசியல் தஞ்சம் கோரி ஓட வேண்டிய தேவை எனக்கு இல்லையென, விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

பாராளுமன்ற அமர்வு இன்று (27) மு.ப. 09.30 மணிக்கு ஆரம்பமான வாய்மூல விடைக்கான வினாக்களுக்காக நேரத்தின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், ஜனாதிபதி ரணில் என்னை அரசியல் ரீதியாக பழி வாங்குகிறார் என்றே எண்ணத் தோன்றுகிறது. ஊழல், மோசடிகளை வெளிக்கொணர்ந்த எனக்கு அப்படிச் செய்யலாமா? எனவும் இதன்போது கேள்வி எழுப்பினார்.

எனது அரசியல் வரலாற்றில் நான் யாரிடமும் கை நீட்டியது கிடையாது. எந்த தீய செயல்களுக்கும் துணை நின்றதும் கிடையாது எனவும் அவர் தெரிவித்தார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles