(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
டைட்டானிக் கப்பலை பார்வையிடச் சென்றபோது விபத்துக்குள்ளான டைட்டானிக் நீர்மூழ்கிக் கப்பலில் இருந்தவர்களின் உடல் பாகங்கள் என சந்தேகிக்கப்படும் உடல் உறுப்புகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
உடல் உறுப்புகள் தொடர்பாக முறையான விசாரணையை மேற்கொள்ள கடலோர காவல்படை எதிர்பார்ப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் விபத்துக்குள்ளான டைட்டானிக் கப்பலை பார்வையிடச் சென்ற டைட்டானிக் நீர்மூழ்கிக் கப்பல் விபத்துக்குள்ளானதில் அதில் பயணம் செய்த 5 பேர் உயிரிழந்தனர்.
இந்நிலையில், விபத்து தொடர்பான விசாரணைக்கு பிரான்ஸ், கனடா மற்றும் பிரிட்டன் ஆதரவு அளித்துள்ளன.