NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தபால் மூல வாக்களிப்பு 80 சதவீதம் நிறைவு – பிரதி தபால்மா அதிபர் அறிவிப்பு!

2024ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில், தபால்மூல வாக்களிப்பு வீதம் கடந்த 2 நாட்களாக அதிகளவில் பதிவாகியுள்ளதாக பிரதி தபால்மா அதிபர் ராஜித ரணசிங்க தெரிவித்துள்ளார்.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த அவர், கடந்த இரு தினங்களில் 80 சதவீதத்திற்கும் அதிகமானோர் தபால் மூலம் வாக்களித்துள்ளனர்.

முதல் நாளிலும், இன்றும் அதிக எண்ணிக்கையிலான வாக்குகள் பயன்படுத்தப்பட்டதை அவதானிக்க முடிந்தது.

அதேவேளை, 2024 ஜனாதிபதித் தேர்தலில் மொத்தம் 7 இலட்சத்து 12 ஆயிரத்து 319 வாக்காளர்கள் தபால் மூலம் வாக்களிக்கத் தகுதி பெற்றுள்ளனர் என்றும் அதில் 80 சத சதவீதமாக வாக்குகள் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

Share:

Related Articles