NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தான் பயணித்த அதே பஸ்ஸில் மோதுண்டு யுவதி பலி!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

ஹைலெவல் வீதியில் அவிசாவளை – உக்வத்தை மயானத்துக்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் தான் பயணித்த அதே பஸ்ஸினால் மோதப்பட்டு 23 வயதுடைய யுவதி ஒருவர் நேற்று (25) உயிரிழந்துள்ளார்.

அவிசாவளை பொலிஸார் இதனை தெரிவித்துள்ளனர்.

யுவதி அவிசாவளையிலிருந்து குறித்த பஸ்ஸில் பயணித்து உக்வத்தை மயானத்துக்கு அருகில் இறங்கி நடந்தபோது அதே பஸ்ஸினால் மோதப்பட்டு உயிரிழந்துள்ளமை முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஆவிசாவளை – புவக்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய யுவதியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

யுவதியின் சடலம் அவிசாவளை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், பிரேத பரிசோதனைகள் இன்று (26) முன்னெடுக்கப்படவுள்ளன.

இச்சம்பவம் தொடர்பில் அவிசாவளை தலைமையக பொலிஸ் போக்குவரத்துப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles