NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பிரதமர் மோடிக்கு ஜனாதிபதி ரணில் வாழ்த்து

டெல்லி: லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காத நிலையில், என்டிஏ கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் இன்று டெல்லியில் நடக்கிறது. யார் ஆட்சியை அமைக்கப் போகிறார்கள் என்பதை முடிவு செய்ய இது முக்கியமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

543 சீட்களை கொண்ட நாடாளுமன்றத்தில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்க எந்தவொரு கட்சியும் 272 இடங்களில் வெல்ல வேண்டும். ஆனால், பாஜக 240 இடங்களில் மட்டுமே வெல்ல கூட்டணியில் உள்ள தெலுங்கு தேசம் 16 சீட்களிலும், ஜேடியு 12 சீட்களிலும், ஷிண்டே சிவசேனா 6 சீட்களிலும் வென்றன.

இதனால் எந்தவொரு கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத சூழலே ஏற்பட்டது இதற்கிடையே பாஜக ஏற்கனவே ஆட்சியை அமைக்கும் பணிகளைத் தொடங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையிலே நம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்திய பொதுத் தேர்தலில் பெற்ற வெற்றிக்காக மோடியை வாழ்த்தியுள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles