மாவத்தகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிலஸ்ஸ பகுதியிலுள்ள வீடொன்றிற்குள் கூரிய ஆயுதத்தினால் தாக்கப்பட்டு பெண்ணொருவர் கொலைச் செய்யப்பட்டுள்ளார்.
வெளி நாட்டிலிருந்து இலங்கைக்கு வந்து தனியாக வசித்து வந்த பெண் ஒருவர் நேற்று (06) இரவு படுகொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.உயிரிழந்த பெண் 62 வயதுடையவர் என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்க்கொண்டு வருகின்றனர்.