NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பெருந்தோட்ட மக்கள் சொந்த காணிகளில் இருப்பதைப் பலர் விரும்பவில்லை – பழனி திகாம்பரம்

பெருந்தோட்ட மக்கள் சொந்த காணிகளில் இருப்பதைப் பலர் விரும்பவில்லை என, தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான பழனி திகாம்பரம் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய மக்கள் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவாக வட்டவளை பகுதியில் நடத்தப்பட்ட பிரசார கூட்டத்தில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, தேர்தலில் தாம் வெற்றியடைவதை விடவும் சஜித் பிரேமதாசவை தோல்வியடையச் செய்ய வேண்டும் என்பதையே நோக்கமாகக் கொண்டுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் உதயகுமார் இந்த சந்திப்பில் வைத்துத் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, டிக்கோயா பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கருந்துரைத்த தமிழ் முற்போக்கு கூட்டணியின் பிரதித் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான வேலுசாமி இராதாகிருஸ்ணன், கடந்த காலங்களில் ராஜபக்ஷக்களுடன் இருந்தவர்களே தற்போது ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles