NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

மலையக தமிழ்ப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு ஒத்தி வைப்பு….!

பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இந்திய வம்சாவளி மலையக கட்சிளுக்கும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கும் இடையில் எதிர்வரும் 11 ஆம் திகதி கொழும்பில் சந்திப்பை நடத்த, ஜனாதிபதி செயலகம் விடுத்த அழைப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் 12 ஆம் திகதி நுவரெலியாவில், தமிழ் முற்போக்கு கூட்டணி, மலையகம் – 200 தொடர்பில் நடத்த உள்ள, நாம் இலங்கையர் பேரணி காரணமாக, கூட்டணி பாராளுமன்ற உறுப்பினர்கள் எதிர்வரும் 11 ஆம் திகதி கொழும்பில் இல்லாத காரணத்தாலும், நாளை மறுதினம் பெருந்தோட்ட மக்கள் எதிர்கொள்ளும் சவால்கள் தொடர்பில் பாராளுமன்றத்தில், தமிழ் முற்போக்கு கூட்டணி முன்வைத்துள்ள முழுநாள் விவாதம் காரணமாகவும், ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடனான சந்திப்பு அடுத்த வாரத்துக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், இது தொடர்பில், பொருத்தமான தினத்தை பின்னர் அறிவிப்பதாக ஜனாதிபதி செயலகம் தனக்கு அறிவித்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles