NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வாகன சாரதிகளுக்கான விசேட அறிவித்தல்

வாகன சாரதிகளுக்கு பொலிஸாரால் விசேட அறிவித்தல் ஒன்று விடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி, குறித்த அறிவித்தலில், வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகள் அனைவரும் தங்களது வாகனங்களின் ஆவணங்களை எடுத்துச் செல்லுமாறு காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இதனால் , வாகன சாரதிகள் அனைவரும் வீதிகளில் பயணிப்பதற்கு முன்னர் தங்களது வாகனங்களின் ஓட்டுனர் உரிமம் , வாகன காப்பீடு, வாகன வருமான அனுமதிப்பத்திரம் உள்ளிட்ட அனைத்து உரிமங்கள் மற்றும் ஆவணங்களை எடுத்துச் செல்லுமாறு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், கனரக வாகனங்களில் பயணிக்கும் சாரதிகள் அனைவரும் கனரக வாகன அனுமதிப்பத்திரத்தை எடுத்துச் செல்லுமாறும் பொலிஸார் அறிவித்துள்ளனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles