NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

விக்ரம் லேண்டரை புகைப்படம் எடுத்த ரோவர்!

இந்தியாவின் இஸ்ரோ நிலவின் தென் துருவத்தில் ஆய்வு செய்வதற்காக விண்ணுக்கு ஏவிய சந்திரயான்-3 விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்ற லேண்டர் வெற்றிகரமாக நிலவின் தென் துருவத்தில் தரையிறங்கியது.

அதிலிருந்து பிரிந்து சென்ற ரோவர் கடந்த சில நாட்களாகவே நிலவின் மேற்பரப்பில் ஆய்வு பணியில் ஈடுபட்டு வருகிறது. இது நிலவில் கந்தகம் உள்ளிட்ட தாதுக்கள் இருப்பதை கண்டறிந்துள்ளது.

இது தொடர்பாக இஸ்ரோ நேற்று வெளியிட்டிருந்த அறிக்கையில்இ ‘நிலவின் தென்பகுதியில் கந்தகம், அலுமினியம், கல்சியம், இரும்பு, குரோமியம், டைட்டானியம்இ மங்கனீசு ஆகியவை இருப்பதை கண்டறிந்துள்ளது.

இதுதவிர ஒட்சிசன் இருப்பதையும் கண்டறிந்துள்ள ரோவர், ஹைட்ரஜன் இருக்கிறதா என தனது தேடுதல் வேட்டையை தொடங்கி விட்டது’ என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நிலவின் மேற்பரப்பில் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டுள்ள சந்திரயான்-3 விண்கலத்தின் ரோவர், லேண்டரை எடுத்த புகைப்படத்தை இஸ்ரோ வெளியிட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles