NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வெசாக் போயா தினத்தை முன்னிட்டு கைதிகளை பார்வையிட வாய்ப்பு!

வெசாக் போயா தினத்தை முன்னிட்டு சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு பார்வையாளர்களை காண விசேட சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

இதன்படி நாளை மற்றும் நாளை மறுதினம் ஆகிய இரு தினங்களில் கைதிகளை பார்வையிடுவதற்கு கைதிகளுக்கு சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த இரண்டு நாட்களிலும் கைதிகளின் உறவினர்கள் கொண்டு வரும் உணவுப் பொதிகள் மற்றும் இனிப்புகளை ஒருவருக்கு மட்டும் போதுமான அளவில் வழங்குவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதேவேளை எதிர்வரும் வெசாக் பண்டிகையை முன்னிட்டு இன்று முதல் மூன்று நாட்களுக்கு நாடளாவிய ரீதியில் மதுபானசாலைகளை மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மதுவரி திணைக்களம் தெரிவித்துள்ளது.

இதன்படி, இந்த காலப்பகுதியில் மதுபானசாலைகளை மூடுவதை ஒழுங்குபடுத்துவதற்கு அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக திணைக்கள தகவல்கள் தெரிவிக்கின்றன.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles