NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அநுரவே அதிக எண்ணிக்கையிலான கட்சி அலுவலகங்களை நிறுவியுள்ளதாக தகவல்!

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் 3 பிரதான வேட்பாளர்களில், தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் அநுரகுமார திஸாநாயக்கவே அதிக எண்ணிக்கையிலான கட்சி அலுவலகங்களை நிறுவியுள்ளதாக பொலிஸ் தலைமையகம் தெரிவித்துள்ளது.

தேசிய மக்கள் சக்தி வேட்பாளருக்காக நாடு முழுவதும் நான்காயிரத்து 980 கட்சி அலுவலகங்கள் நிறுவப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகத்திற்கு தகவல்கள் கிடைத்துள்ளன.

மேலும், ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆயிரத்து 13 கட்சி அலுவலகங்களும், ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸவுக்காக மூவாயிரத்து 872 கட்சி அலுவலகங்களும் அமைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதற்கமைய, 3 முக்கிய வேட்பாளர்களுக்காக நாடு முழுவதும் சுமார் பத்தாயிரம் கட்சி அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பெரும்பாலான கட்சி அலுவலகங்கள் மேல் மாகாணத்தில் அமைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அதற்கடுத்து, தென் மாகாணத்திலும், வடமேற்கு மாகாணத்திலும் அதிக எண்ணிக்கையிலான கட்சி அலுவலகங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் மேலும் தெரிவித்துள்ளது.

Share:

Related Articles