NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

அரச அதிகாரிகளின் முறைப்பாடுகளை உடனடியாக விசாரிக்குமாறு பணிப்புரை…!

அரச அதிகாரிகளின் முறைப்பாடுகள் தொடர்பான விசாரணைகளை வெளிப்படை தன்மையுடன் விரைந்து எடுக்குமாறு உள்நாட்டலுவல்கள் இராஜாங்க அமைச்சர் அசோக பிரியந்த அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

உள்நாட்டலுவல்கள் அமைச்சில் நேற்று நடைபெற்ற முன்னேற்ற ஆய்வுக் கூட்டத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

எந்தவொரு செல்வாக்கிற்கும் அடிபணியாமல் உரிய முறைப்பாடுகளை உடனடியாக விசாரிக்குமாறு புலனாய்வுத்திணைக்கள அதிகாரிகளுக்கு இராஜாங்க அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.

Share:

Related Articles