NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இருவேறு பகுதிகளில் மீட்கப்பட்ட சடலங்கள்!

கதிர்காமம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மாணிக்க கங்கையில் நேற்று (15) பிற்பகல் ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கதிர்காமம் பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை எனவும் இவர் 05 அடி 06 அங்குலம் உயரமுடையவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சடலமானது பிரேத பரிசோதனைக்காக அம்பாந்தோட்டை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கதிர்காமம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

இதேவேளை கண்டி, கட்டுகஸ்தோட்டை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ரிட்டிகஹபெல பிரதேசத்தில் நேற்று (15) ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கட்டுகஸ்தோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.

ரிட்டிகஹபெல, ஹல்லொலுவ பிரதேசத்தைச் சேர்ந்த 58 வயதுடைய நபரொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் விபத்தில் சிக்கி உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சடலமானது பிரேத பரிசோதனைக்காக கண்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Related Articles