NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஈஸ்டர் தாக்குதல் குறித்து மைத்திரி CID யிடம் கருத்து…!

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் மூளையாக செயல்பட்டவர் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு வழங்கிய இரகசிய வாக்குமூலம் தொடர்பில் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் நேற்று (26) முதன்முறையாக அம்பலப்படுத்தியுள்ளார்.

பாராளுமன்றி்ல் கருத்து தெரிவித்த அமைச்சர்,

”அந்த வாக்கு மூலத்தில் மைத்திரிபால சிறிசேனவால் இந்த நாட்டின் பிரஜை ஒருவர் பற்றியோ அல்லது இந்த நாட்டு பிரஜை ஒருவரின் தொடர்பு பற்றியோ குறிப்பிட்டில்லை. எனவே அது தொடர்பில் விசாரணைகள் நடைபெறுகின்றன. இதற்கு மேலதிகமாக வேறு எதையும் என்னால் கூறமுடியாது” என குறிப்பிட்டார்.

Share:

Related Articles