கொழும்பு – கிராண்ட்பாஸ் நாகலகம் வீதியில் அண்மையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய மற்றுமொரு சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டவர் கிராண்ட்பாஸ் பகுதியைச் சேர்ந்த 31 வயதுடையவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தொலைபேசி அழைப்புகள் ஊடாக சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த நபரிடமிருந்து இரண்டு கைத்தொலைபேசிகளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை கிராண்ட்பாஸ் பொலஸார் மேற்கொண்டு வருகின்றனர்.