NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

சிலி நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழப்பு!

சிலி நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஜெபஸ்டின் பினிரா ஹெலிகொப்டர் விபத்தில் உயிரிழந்துள்ளார்.

 அந்நாட்டின் பிரபல சுற்றுலா தலமான லகோ ரங்கொ பகுதிக்கு ஜெபஸ்டின் பினிரா நேற்று(06) ஹெலிகோப்டரில் சென்றுகொண்டிருந்தபோது ஹெலிகொப்டர் திடீரென விபத்துக்குள்ளானது.

இவ்விபத்தில் ஜெபஸ்டின் பினிரா உயிரிழந்ததுடன், ஹெலிகோப்டரில் அவருடன் பயணித்த 3 பேர் படுகாயமடைந்ததுடன், அனைவரும் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

அதேவேளை, இந்த விபத்துக்கான காரணம், ஜெபஸ்டின் பினிரா உடன் பயணித்த 3 பேர் யார்? என்பது குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.

ஜெபஸ்டின் பினிரா 2010 முதல் 2014 வரை மற்றும் 2018 முதல் 2022 வரை என இரண்டு முறை சிலி ஜனாதிபதியாக பதவி வகித்தமை குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles