NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தாய்லாந்தின் – பாங்கொக் நகரில் அவசரகாலநிலை பிரகடனம்..!

தாய்லாந்தின் – பாங்கொக் நகரில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி 7.3 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதையடுத்து இந்த அவசரகாலநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இதேவேளை பேங்கொக்கில் நிலநடுக்கம் காரணமாக இடிந்துவிழுந்த கட்டிடத்திற்குள் 50க்கும் அதிகமானவர்கள் சிக்குண்டுள்ளனர்.

பேங்கொக்கின் சட்டுசாச் பாக்கில் இடிந்துவிழுந்த கட்டிடத்திற்குள்ளேயே இவர்கள் சிக்குண்டுள்ளனர். மேலும் ஏழு பேர் காயமடைந்துள்ளதுடன் 43 பேர் சிக்குண்டுள்ளனர் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

Share:

Related Articles