NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பதவி இராஜினாமா..!

தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் பந்துல திலீப விதாரண, தனது பதவியில் இருந்து இராஜினாமா செய்துள்ளார்.

அதற்கான கடிதத்தை அவர் போக்குவரத்து அமைச்சின் செயலாளரிடம் சமர்ப்பித்துள்ளதாக தெரியவருகிறது.

பிமல் ரத்நாயக்க அமைச்சராக உள்ள போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சின் கீழ் வரும் நிறுவனங்களின் தலைவர் பதவியில் இருந்து இராஜினாமா செய்த மூன்றாவது அதிகாரி இவர் ஆவார்.

தேசிய போக்குவரத்து மருத்துவ நிறுவனத்தின் தலைவராகப் பணியாற்றிய டாக்டர் ருவன் விஜயமுனி மற்றும் தேசிய போக்குவரத்து சபையின் தலைவராகப் பணியாற்றிய ரமல் சிறிவர்தன ஆகியோர் முன்னர் பதவி விலகியமையும் குறிப்பிடத்தக்கது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles