NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் 184 முறைப்பாடுகள் பதிவு..!

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் கடந்த 24 மணித்தியாலங்களில் தேர்தல்கள் ஆணைக்குழுவிற்கு 184 முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

தேசிய தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையத்திற்கு 23 முறைப்பாடுகளும், மாவட்ட தேர்தல் முறைப்பாட்டு முகாமைத்துவ நிலையங்களுக்கு 161 முறைப்பாடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.

அதன்படி ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக் கிடைக்கப்பெற்ற முறைப்பாடுகளின் மொத்த எண்ணிக்கை 4,215 ஆக அதிகரித்துள்ளது.

அத்துடன், தேர்தல் விதிமுறைகளை மீறியமை தொடர்பில் 4,097 முறைப்பாடுகளும் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பில் 30 முறைப்பாடுகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கடந்த ஜூலை மாதம் 31ஆம் திகதி முதல் இதுவரையான காலப்பகுதியிலேயே இந்த முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதேவேளை, கிடைக்கப்பெற்ற மொத்த முறைப்பாடுகளில் 3,641 முறைப்பாடுகள் தீர்த்து வைக்கப்பட்டுள்ளதுடன் 574 முறைப்பாடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles