பத்தரமுல்ல பகுதியில் உள்ள விடுதி ஒன்றில் நபர் ஒருவர் தூக்கிட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இன்று (11) காலை 9 மணியளவில் சடலம் மீட்கப்பட்டதாக தலங்கம பொலிஸார் தெரிவித்தனர்.
அந்த விடுதியில் பணிபுரிந்து வந்த 50 வயதுடைய நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த விடயம் தொடர்பில் அயலவர்கள் பொலிஸாருக்கு அறிவித்த நிலையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
மேலும்,அந்த நபர் விடுதியில் தனியாக இருந்ததாகவும், அவர் அந்த இடத்தை கவனித்து வந்ததாகவும் கூறப்படுகிறது.மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தலங்கம காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.