NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ள அஞ்சல் தொழிற்சங்கங்கள்!

கொழும்பில் நேற்று (10.03.2025) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டஅஞ்சல் மற்றும் தொலைத்தொடர்பு சங்கத்தின் செயலாளர் மஞ்சுள ஜயசுந்தர, அஞ்சல்தொழிற்சங்கங்கள் எதிர்வரும் 17ஆம் மற்றும் 18ஆம் திகதிகளில் அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட தீர்மானித்துள்ளதாக கூறியுள்ளார்.

மேலும் ஊழியர் ஆட்சேர்ப்பு, நியமனங்கள், பதவி உயர்வுகள் மற்றும் வேதன உயர்வு உள்ளிட்ட பல பிரச்சினைகளை மையமாகக் கொண்டு இந்த பணிப்புறக்கணிப்பு முன்னெடுக்கப்படவுள்ளததாகவும் , இப்பிரச்சினைகள் குறித்து அஞ்சல் மா அதிபருடன் கலந்துரையாடப்பட்ட போதிலும் சாதகமான தீர்வு கிடைக்கவில்லை என சுட்டிக்காட்டியுள்ளார்.

இதனால்அஞ்சல் தொழிற்சங்கங்கள் குறித்த 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபடுவதற்கு தீர்மானம் எடுக்க பட்டதாக கூறியிருந்தார்.

Share:

Related Articles