NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பூப்பறிக்கச் சென்ற நபர் படுகொலை – ஹங்வெல்லயில் சம்பவம்!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

ஹங்வெல்ல – தும்மோதர சந்திக்கு அருகில் தனியார் பஸ் சாரதி ஒருவர் இன்று (15) அதிகாலை படுகொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் அதிகாலை 5.55 மணியளவில் வீதியருகே உள்ள பூ மரமொன்றில் பூப்பறித்து கொண்டிருந்த போது, கூரி ஆயுதத்தால் நபரொருவரால், தாக்குதலுக்கு இலக்காகியுள்ளதாக ஹங்வெல்ல பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேக நபர் கொழும்பு நோக்கி பயணிக்கும் புகையிரதத்தில் ஏறி தப்பிச் செல்லும் போது பொலிஸாரால் கைது செய்து செய்யப்பட்டுள்ளார்.

சம்பவத்தில் இங்கிரிய பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடைய இரண்டு பிள்ளைகளின் தந்தையே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share:

Related Articles