NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பெண்களின் நிர்வாண புகைப்படங்களை இணையத்தில் பரப்பியவர் கைது!

பெண்களின் நிர்வாண புகைப்படங்களை வைத்து அவற்றை சமூக ஊடகங்களில் பரப்பிய சுகாதார ஊழியர் ஒருவர் கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் பதுளை கந்தகொல்ல பிரதேசத்தில் வசிக்கும் 34 வயதுடைய சுகாதார உதவியாளராக கடமையாற்றியவர் என பொலிஸார் தெரிவித்தனர்.

இவர் தொடர்பில் பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு நேற்று (24) இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.

Share:

Related Articles