NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

யாழில் விபரீத முடிவால் குடும்பஸ்தர் உயிரிழப்பு…!

யாழ்ப்பாணம் – இருபாலை கிழக்கு பகுதியில் விபரீத முடிவெடுத்து குடும்பஸ்தர் ஒருவர் நேற்று உயிரிழந்துள்ளார்.

இருபாலை கிழக்கு பகுதியைச் சேர்ந்த 61 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். குறித்த நபர் வீட்டுக்கு முன்னால் உள்ள வேப்பமரத்தில் தூக்கில் தொங்கியுள்ளார்.

இதன்போது அவரை மீட்ட உறவினர்கள் கோப்பாய் வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் அவர் உயிரிழந்ததாக கூறப்படுகின்றது.எனினும் அவரது உயிரிழப்புக்கான காரணம் வெளியாகத நிலையில், மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

Share:

Related Articles