NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

யாழில் 3 இளைஞர்கள் கைது!

யாழ்ப்பாணம் – ஆனைக்கோட்டை, உயரப்புலம் பகுதியில் கடந்த திங்கட்கிழமை (18) இரவு வீதியில் பயணித்த பட்டா ரக வாகனத்தை மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் அடங்கிய கும்பல் வழி மறித்து, சாரதியை சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

குறித்த சம்பவத்தில் காயமடைந்த சாரதி சிகிச்சைக்காக யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சாரதியை கடுமையாக தாக்கிய குற்றச்சாட்டில் 3 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என மானிப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளது. 

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த மானிப்பாய் பொலிஸார், தாக்குதலை மேற்கொண்ட குற்றச்சாட்டில் மானிப்பாய், கல்வியங்காடு மற்றும் மணியந்தோட்டம் பகுதிகளை சேர்ந்த 3 இளைஞர்களை செவ்வாய்க்கிழமை (19) கைது செய்துள்ளனர்.

மேலும் இது தொடர்பான விசாரணைகளை மானிப்பாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles