NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

லயன் குடியிருப்பு தீப்பரவல் – Lyca ஞானம் அறக்கட்டளை நிவாரண உதவி…!

கேகாலை – யட்டியாந்தோட்டை, பனாவத்தை தோட்டம் இரண்டாம் பிரிவிலுள்ள தோட்டக் குடியிருப்பில் நேற்று அதிகாலை ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி இருவர் உயிரிழந்தனர். இந்நிலையில், குறித்த விபத்து தொடர்பில் அறிந்து கொண்ட லைகா ஞானம் அறக்கட்டளை அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட நிவாரணங்களை நேற்றிரவு வழங்கியுள்ளது.கேகாலை – யட்டியாந்தோட்டை, பனாவத்தை தோட்டம் இரண்டாம் பிரிவிலுள்ள தோட்டக் குடியிருப்பில் நேற்று அதிகாலை ஒரு மணியளவில் பரவிய தீயில் சிக்கி இருவர் உயிரிழந்துள்ளனர். சம்பவத்தில் 60 வயதான கணவனும் 50 வயதான மனைவியுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

குறித்த லயன் குடியிருப்பிலுள்ள 5 வீடுகள் முழுமையாக தீக்கிரையாகியுள்ளதுடன், தீ விபத்திற்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் கேகாலை – யட்டியாந்தோட்டை, பனாவத்தை தோட்ட மக்களுக்கு ஏற்பட்ட இந்த எதிர்பாராத அனர்த்தம் குறித்து அறிந்து கொண்ட லைகா ஞானம் அறக்கட்டளை அவர்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை பெற்றுக்கொடுப்பதற்கு நடவடிக்கை எடுத்தது.

அதன்படி, லைகா ஞானம் அறக்கட்டளை மற்றும் சுவர்ணவாஹினி ஊடக வலையமைப்பின் தலைவர் அல்லிராஜா சுபாஸ்கரன் மற்றும் அவருடைய மனைவி வைத்தியர் பிரேமா தர்சினி சுபாஸ்கரன் தலைமையில் இந்த நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

அதற்கமைய பாதிக்கப்பட்ட மக்களுக்கான உணவுகள், அத்தியாவசிய பொருட்கள் மற்றும் ஆடைகள் என அனைத்தையும் எடுத்துக்கொண்டு நேற்றிரவு கேகாலை – யட்டியாந்தோட்டை, பனாவத்தை தோட்டத்துக்குச் சென்றுள்ளனர்.

Share:

Related Articles