NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

வாக்களிப்பின் போது தேர்தல் வன்முறைகள் எதுவும் பதிவாகவில்லை..!

ஜனாதிபதி தேர்தல் வாக்குப் பதிவுகளின் போது இன்று தேர்தல் வன்முறைகள் எதுவும் பதிவாகி இருக்கவில்லை என பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இதேவேளை, இலங்கையின் 9ஆவது நிறைவேற்றதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் 4 மணியுடன் உத்தியோகப்பூர்வமாக நிறைவடைந்துள்ளது.

மேலும்,தற்போது மாவட்ட ரீதியாக தபால் மூல வாக்குகளை எண்ணும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தெரிவித்தாட்சி அலுவலர்கள் தெரிவித்தனர்.

Share:

Related Articles