தெஹிவளை தேசிய மிருகக்காட்சிசாலையில் உள்ள 153 வயதான 400 கிலோகிராம்களுக்கு மேல் எடையுள்ள இராட்சத ஆமை, ஏப்ரல் 16 ஆம் திகதி காலை 9:04 மணிக்கு நடைபெறவிருக்கும் பாரம்பரிய புத்தாண்டு எண்ணெய் தேய்ப்பு விழாவில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மிருகக்காட்சிசாலையின் செயல்பாட்டு பணிப்பாளர் அனோமா பிரியதர்ஷினி தெரிவித்துள்ளார்.
அதன்படி தெஹிவளை மிருகக்காட்சிசாலைக்கு வருபவர்கள் இந்த விழாவைக் காண முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
யானைகள், வரிக்குதிரைகள், நீர்யானைகள், சிம்பா என்ற சிங்கக் குட்டி, மான் மற்றும் பல பறவை இனங்களும் தலையில் எண்ணெய் பூசும் சடங்கில் பங்கேற்க தேர்வு செய்யப்பட்டுள்ளன.
இந்த ஆமை 1930 ஆம் ஆண்டு மிருகக்காட்சிசாலைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்டடுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.