NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஆளுநர் பதவியிலிருந்து விலகினார் ஏ.ஜே.எம். முஸம்மில்..! சஜித்துக்கு ஆதரவளிக்க தீர்மானம்

ஊவா மாகாண ஆளுநர் பதவியிலிருந்து ஏ.ஜே.எம். முஸம்மில் விலகியுள்ளார்.

அவர் தமது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த கடிதத்தில், தமது பதவி விலகலின் பின்னர் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு ஆதரவளிப்பதாகவும் அறிவித்துள்ளார்.

இதேவேளை, பல ஆளுநர்கள் பதவியில் இருக்கும் போதே, வெவ்வேறு ஜனாதிபதி வேட்பாளர்களுக்குப் பிரசாரம் செய்து வருகின்றமை தொடர்பாகத் தாம் அதிருப்தி கொண்டிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

Share:

Related Articles