NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

உலகக் கோப்பை செஸ் போட்டி இன்று: ‘என்னால் முடிந்ததை முயற்சியை செய்வேன்’ – பிரக்ஞானந்தா!

(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)

உலகக் கோப்பை செஸ் தொடரின் இறுதிப்போட்டியின் முதல் சுற்று நேற்று (22) நடைபெற்றது.

மார் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற இந்த போட்டி கிளாசிக்கல் முறையில் 35 நகர்வுகள் வரை இந்த போட்டி நீடித்தது. ரூக் நைட் பான் எண்டிங்கை நோக்கி போட்டி சென்ற காரணத்தால், இருவரும் போட்டியை சமன் செய்து கொள்ள ஒப்புக் கொண்டனர்.

அதன்படி கிளாசிக்கல் சுற்றின் இரண்டாவது போட்டி இன்று (23) நடைபெற இருக்கிறது. இந்நிலையில், இறுதிப்போட்டி குறித்து தமிழகத்தை சேர்ந்த இந்திய வீரர் பிரக்ஞானந்தா பேட்டி அளித்துள்ளார். அதில், ‘கடினமான போட்டியாகத்தான் இருக்கும், வெற்றிக்காக கார்ல்சன் தீவிரமாக போராடுவார். ஓய்வு எடுத்துவிட்டு, புத்துணர்ச்சியுடன் திரும்பி வந்து, என்னால் முடிந்ததை முயற்சியை செய்வேன்,’ என்று தெரிவித்துள்ளார்.

இறுதிப்போட்டியின் முதல் சுற்று டிராவில் முடிந்துள்ள நிலையில், இன்று நடைபெறும் போட்டியில் யார் வெற்றி பெறுவார் என்ற எதிர்பார்ப்பு பரவலாக எழுந்துள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles