NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஒலிம்பிக்கில் இடம்பெற்ற தவறு – தேசிய கீதத்தை மாற்றி இசைத்ததால் சர்ச்சை!

பாரிஸில் நடைபெறும் 33ஆவது ஒலிம்பிக் போட்டி நேற்று ஆரம்பிக்கப்பட்டு, பல்வேறு நிகழ்ச்சி மற்றும் போட்டிகள் நடைபெற்று வருகின்றன.

இதில் 196 நாடுகளைச் சேர்ந்த மொத்தமாக 10,672 வீரர், வீராங்கனைகள் 32 விளையாட்டுகளில் பங்கேற்கின்றனர். பிரான்ஸ் முழுவதும் 35 மையங்களில் பல்வேறு விளையாட்டுகள் நடைபெறுகின்றன.

இந்நிலையில், கூடைப்பந்து போட்டியொன்றின்போது தென் சூடான் தேசிய கீதத்திற்குப் பதிலாக சூடான் தேசிய கீதத்தை மாற்றி இசைத்திருந்தனர்.

இத்தவறுக்காக சர்வதேச ஒலிம்பிக் சம்மேளனம் மன்னிப்பு கோரியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Share:

Related Articles