NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

குளவிக்கொட்டுக்கு இலக்காகி 7 தொழிலாளர்கள் வைத்தியசாலையில் அனுமதி..!

நோர்வூட் – பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் கீழ் பிரிவு தோட்ட தேயிலை மலையில் தேயிலை பறித்து கொண்டிருந்த 7 தொழிலாளர்கள் குளவி கொட்டுக்கு இலக்காகி பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக நோர்வூட் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த சம்பவம் இன்று மாலை 5 மணியளவில் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பொகவந்தலாவ கெர்க்கஸ்வோல்ட் கீழ்ப்பிரிவு தோட்ட தேயிலை மலையில் மரம் ஒன்றில் இருந்த குளவி கூடு கலைந்தே இவ்வாறு தொழிலாளர்களை தாக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தாக்குதலுக்கு உள்ளான தொழிலாளர்கள் 7 பேரும் பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் காயங்களுக்கு உள்ளான தொழிலாளர்கள் குறித்து அச்சமடைய தேவையில்லை என வைத்தியசாலையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

Share:

Related Articles