(அமிர்தப்பிரியா சிவலிங்கம்)
பொதுத் தரப் பரீட்சையின் செயன்முறை பரீட்சைகளை நாளை மறுதினம் (02) முதல் எதிர்வரும் 12ஆம் திகதி வரை நடத்த பரீட்சை திணைக்களம் திட்டமிட்டுள்ளது.
இசை பாடத்திற்கான செயன்முறை பரீட்சை பரீட்சை எதிர்வரும் 6ஆம் திகதி நடைபெறவுள்ளது.
பாடசாலை விண்ணப்பதாரிகளின் அனுமதி அட்டைகள் அனைத்தும், அதிபர்களுக்கு தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும்இ தனியார் விண்ணப்பதாரிகளின் அனுமதி அட்டைகள் அவர்களது தனிப்பட்ட முகவரிக்கு தபாலில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் பரீட்சை திணைக்களம் வெளியட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது தொடர்பில் விசாரணைகள் தேவைப்படுமாயின் 1911, 0112784208, 0112786616 ஆகிய தொலைபேசி இலக்கங்களுக்கு அழைக்குமாறு கோரப்பட்டுள்ளது.