NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாளில் நீக்கப்பட்ட கேள்விகளுக்கு மதிப்பெண்களை வழங்க தீர்மானம்

புலமைப்பரிசில் பரீட்சையின் வினாத்தாள்கள் குளறுபடி ஏற்பட்டதையடுத்து மூன்று கேள்விகளையும் நீக்கி அதற்கான மதிப்பெண்களை வழங்க தீர்மானித்துள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையின் முதல் வினாத்தாளை கையடக்கத் தொலைபேசி மூலம் பகிர்ந்ததாக கூறப்படும் பரீட்சை நிலையமொன்றிலிருந்த பாடசாலை அதிபர் உட்பட 6 ஆசிரியர்கள் பரீட்சை திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share:

Related Articles