NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கங்கனாவை அறைந்த பாதுகாப்பு படை பெண்



Bollywood நடிகையும், பாஜக MPயுமான கங்கனா ரனாவத் டெல்லிக்கு செல்லசண்டிகர் விமான நிலையத்திற்கு சென்றுள்ளார்.

அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த மத்திய தொழில்துறை பாதுகாப்பு படையை சேர்ந்த கான்ஸ்டபிளான குல்விந்தர் கவுர் கங்கனாவை கன்னத்தில் அறைந்துவிட்டார்.

காலையில் இருந்து அனைவரும் அது பற்றியே பேசிக் கொண்டிருக்கிறார்கள். 2020ம் ஆண்டு டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தியபோது அவர்கள் எல்லாம் 100 ரூபாய் அல்லது 200 ரூபாய் வாங்கிக் கொண்டு போராட வந்தவர்கள் என்றார் கங்கனா. என் அம்மாவும் ஒரு விவசாயி.

கங்கனா அப்படி சொன்னபோது என் அம்மாவும் போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தார் என குல்விந்தர் கோபமாக பேசிய வீடியோ வெளியாகியுள்ளது.

விவசாயிகள் பற்றி தரக்குறைவாக பேசியதால் தான் அறைந்தேன் என கங்கனாவிடம் கூறியிருக்கிறார் குல்விந்தர். 

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles