NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

ஐ.நா மனித உரிமைகள் சபையில் இணைவதற்கான வாய்ப்பை இழந்தது சவுதி அரேபியா!

சவுதி அரேபியா மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக வலது குழுக்கள் அளித்த முறைபாடுகளுக்கு அமைய, ஐ.நா.வின் மனித உரிமைகள் சபையில் இணைவதற்கான வாய்ப்பை சவுதி அரேபியா இழந்துள்ளது.

193 உறுப்பினர்களை கொண்ட ஐ.நா சபை, 18 புதிய உறுப்பினர்களை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பபை நடத்தியது. அந்தவகையில், ஆசிய-பசிபிக் குழுவில் 5 இடங்களுக்கு 6 நாடுகள் போட்டியிட்டன. இதில் தாய்லாந்து 177 வாக்குகள் பெற்றது. சைப்ரஸ், கட்டார் தலா 167 வாக்குகள் பெற்றன. தென்கொரியா 161 வாக்குகள் பெற்றது. மார்ஷல் தீவு 124 வாக்குகள் பெற்றது. சவுதி அரேபியா 117 வாக்குகள் பெற்றது.

இந்த வாக்கெடுப்பிற்கு முன்னதாக, ஐ.நா.வுக்கான மனித உரிமை கண்காணிப்பு இயக்குநர் லூயிஸ் சார்போன்னோ, மனித உரிமை சபையில் பணியாற்ற சவுதி அரேபியா தகுதியற்றது எனத் தெரிவித்தார்.

2022 மற்றும் 2023இல் ஏமன் – சவுதி எல்லையில் எத்தியோப்பியாவில் இருந்து புலம் பெயர்ந்தவர்களை சவுதி எல்லை பாதுகாப்புப்படை வீரர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள். இதில் நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். 2018-ல் சவுதி அரேபிய பத்திரிகையாளர் இஸ்தான்புல்லில் கொலை செய்யப்பட்டதில் அரசின் செயல்பாடு ஆகியவற்றை அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles