NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

பாராளுமன்ற அமர்வு தொடர்பில் வெளியான அறிவிப்பு.!

எதிர்வரும் 18 ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை பாராளுமன்றம் கூடவுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்தார்.

அந்தவகையில் எதிர்வரும் 18 ஆம் திகதி மு.ப. 09.30 – மு.ப. 10.30 வரை வாய்மூல விடைக்கான வினாக்கள் எழுப்பப்படவுள்ளது.அதனைத் தொடர்ந்து மு.ப. 10.30 – பி.ப. 5.00 வரை சுற்றுலாப் பயணத்துறைச் சட்டத்தின் கீழ் ஐந்து கட்டளைகள், உரித்துப் பதிவுச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள், முடிக்குரிய காணிகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள், விளையாட்டில் ஊக்குப் பதார்த்தப் பயன்பாட்டிற்கெதிரான சமவாயச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் தொடர்பிலும் விவாதிக்கப்படவுள்ளது.

பி.ப. 5.00 – பி.ப. 5.30 வரை ஒத்திவைப்பு வேளையின் போதான அரசாங்கத்தின் பிரேரணை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இரண்டாம் நாள் அமர்வாக 19 ஆம் திகதி, மு.ப. 09.30 – மு.ப. 10.30 வரை வாய்மூல விடைக்கான வினாக்கள் எழுப்பப்படவுள்ளது.

மு.ப. 09.30 – மு.ப. 10.30 வரை வாய்மூல விடைக்கான வினாக்கள் எழுப்பப்படவுள்ளது.

அதனை தொடர்ந்து 5 மணிவரை சீட்டாட்டத் தொழில் (ஒழுங்குபடுத்தல்) சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள், தெங்கு அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் தீர்மானம், கொழும்புத் துறைமுக நகரப் பொருளாதார ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் தொடர்பில் விவாதங்கள் இடம்பெறவுள்ளது.

முன்றாம் நாளான 20 ஆம் திகதி, மு.ப. 09.30 – மு.ப. 10.30 வரை வாய்மூல விடைக்கான வினாக்கள் எழுப்பப்படவுள்ளது.

அதனை தொடர்ந்து மு.ப. 10.30 – பி.ப. 5.00 வரை பெண்களின் வலுவூட்டல் சட்டமூலம் – விவாதம் ஒத்திவைக்கப்பட்ட விடயம்இ யுனெஸ்கோவிற்கான இலங்கை தேசிய ஆணைக்குழு சட்டமூலம் – இரண்டாம் மதிப்பீடு தொடர்பிலும் விவாதிக்கப்படவுள்ளது.

பி.ப. 5.00 – பி.ப. 5.30 வரை ஒத்திவைப்பு வேளையின் போதான எதிர்க்கட்சியின் பிரேரணையும் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

Share:

Latest Updates

Categories

Follow Us

Related Articles