குடும்ப தகராறு காரணமாக கணவன் தனது மனைவியை குத்தி கொலை செய்த சம்பவம் நேற்று மாலை கொழும்புத்துறைப் பகுதியில் இடம் பெற்றுள்ளது.
கொழும்புத்துறை ஆனந்தவடலி (ஏவி வீதி) வீதியில் வசித்துவந்த 29 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயான திவீகரன் நிசானி என்ற இளம் குடும்பப்பெண்ணே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கணவன் மனைவிக்கிடையில் தகராறு ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் கணவன் மனைவியின் நெஞ்சுப்பகுதியில் கத்தியால் குத்தியதாகவும், படுகாயமடைந்த மனைவி உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பில் கணவன் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.