NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

யானை தாக்கியதால் இளைஞர் ஒருவர் பலி.

இந்தியா, கோவையை அடுத்துள்ள விராலியூர், குடியிருப்பு பகுதியில் காட்டு யானையொன்று சுற்றத் திரிந்துள்ளது. உடனடியாக விரைந்துவந்த வனத் துறையினர், யானையை காட்டுப் பகுதிக்கு விரட்டினர்.

பின்னர் இரவு பத்து மணியளவில் மீண்டும் அங்கு ஆக்ரோஷமாக ஒற்றைக் காட்டு யானையொன்று சுற்றித் திரிந்துள்ளது. இதனால் காட்டு யானை அருகில் யாரும் செல்ல வேண்டாம் என வனத் துறையினர் கூறியுள்ளனர்.

வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்தும் அதைக் கேட்காமல் யானையை விரட்டச் சென்ற இளைஞர் பலியாகியுள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

Share:

Related Articles