NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

கார் மீது அறுந்து விழுந்த மின் வயரால் 9 பேர் பலி.

கன்வார் யாத்திரையின் போது நேற்று ஞாயிற்றுக்கிழமை கன்வார் பக்தர்கள் பீகாரிலிருந்து சோனாப்பூரிலுள்ள பாபா ஹரிகர்நாத் கோவிலில் நீர் அபிஷேகம் செய்வதற்காக கார்களில் சென்றுள்ளனர்.

சரியாக வைசாலி மாவட்டம், சுல்தான் கபூர் என்ற கிராமத்தினருகில் யாத்திரை கார் சென்றுகொண்டிருந்தபோது மின் வயர்கள் அறுந்து விழுந்துள்ளன.

அந்த மின்சார வயரில் ஒன்று காரின் மீது விழுந்ததில் காரில் பயணித்த 9 பேர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளனர்.மூன்று பேர் தூக்கி வீசப்பட்டுள்ளனர்.சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன.

Share:

Related Articles