NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

உத்தியோகப்பூர்வ வாக்குசீட்டு விநியோகம் எதிர்வரும் 3 ஆம் திகதி ஆரம்பம்!

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பான உத்தியோகபூர்வ வாக்குச் சீட்டு விநியோகம் எதிர்வரும் செப்டெம்பர் 3 ஆம் திகதி ஆரம்பமாகி 14 ஆம் திகதி நிறைவடையும் என பிரதி தபால் மா அதிபர் ராஜித கே ரணசிங்க தெரிவித்துள்ளார்.

அதன்படி, செப்டெம்பர் 8 வாக்குச் சீட்டு விநியோகத்திற்கான சிறப்பு நாளாகக் குறிப்பிடப்படும் எனவும் அன்றைய தினம் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை இது தொடர்பான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான தபால் திணைக்களத்தின் வகிபாகம் முன்வைக்கப்பட்டுள்ளதுடன், அதன்படி தேர்தல்கள் ஆணைக்குழுவின் திகதிக்கு அமைவாக ஒகஸ்ட் 26 ஆம் திகதி முதல் முறையாக வாக்குச் சீட்டுகள் அனுப்பி வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Related Articles