NOW LIVE AT : 99.5/99.7 (Colombo) | Alexa | Google Home | Playstore | Appstore

இரண்டு படகுகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் மாயம்..!

அளுத்கம பெந்தர ஆற்றில் இரண்டு சுற்றுலா படகுகள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் காணாமல் போயுள்ளதாக அளுத்கம பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (22) பிற்பகல் அளுத்கமவில் உள்ள சுற்றுலா ஹோட்டல் ஒன்றில் பணி முடிந்து ஆட்களை ஏற்றிச் சென்ற படகும் பெந்தர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுற்றுலாப் படகுமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளன.

குறித்த விபத்தில் பெந்தர சுற்றுலா விடுதியொன்றில் இருந்த இருவரே காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அவர்கள் இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், காணாமல் போனவர்களைக் கண்டறிவதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், சம்பவம் தொடர்பில் கடற்படையினருக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சம்பவம் தொடர்பில் அளுத்கம மற்றும் பெந்தர பொலிஸ் நிலைய பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

Share:

Related Articles